Sunday, May 22, 2016

திருமணத்திற்கு நாள் பார்க்கும் விதிகள்

திருமணத்திற்கு நாள் பார்க்கும் விதிகள்
திருமணத்திற்கு நாள் பார்க்கும்போது கவனத்தில் கொள்ள‍ வேண்டிய
விதிகள்
1. முதல் விதி
திருமணம் மல மாதத்தில் இடம்பெறக்கூடாது. (மலமாதம் என்பது
இரண்டு அமாவாசை அல்லது இரண்டு பவுர்ணமி ஒரே மாதத்தில்
வருவது.)
2. இரண்டாவது விதி
சித்திரை, வைகாசி, ஆனி, ஆவணி, தை, பங்குனி தவிர இதர
மாதங்களில்
திருமணம் செய்வதைத் தவிர்ப்பது நல்லது.
3. மூன்றாவது விதி
இயன்றவரை சுக்கில பட்ச காலத்திலேயே திருமணம் செய்வது நல்லது
என்பது மூன்றாவது விதி.
4. நான்காவது விதி
புதன், வியாழன், வெள்ளிபோன்ற சுப ஆதிபத்தியமுடைய கிழமைகள்
மிக ஏற்றவை. இதர கிழமைகள் அவ்வளவு உகந்தவை அல்ல.
…ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி, துலாம், தனுசு, மீனம் ஆகிய
சுப லக்கினங்களில் மட்டுமே திருமணம் நடத்த வேண்டும் என்பது தான்
5. ஐந்தாவது விதி
துவிதியை, திரிதியை, பஞ்சமி, ஸப்தமி, தசமி, திரயோதசி ஆகிய சுப
திதிகள் தவிர இதர திதிகளை தவிர்ப்பது
6. ஆறாவது விதி
முகூர்த்த லக்கினத்துக்கு 7ம் இடம். முகூர்த்த நாளன்று சுத்தமாக இருக்க
வேண்டும்.
7. ஏழாவது விதி
அக்கினி நட்சத்திரம், மிருத்யூ பஞ்சகம், கசரயோகங்கள் போன்ற
காலகட்டத்தில் திருமணம் நடத்தக்கூடாது.
8. எட்டாவது விதி
திருமணத்தின் போது குரு, சுக்கிரன் போன்ற சுபகிரகங்கள் திருமண
லக்கினத்துக்கும் மணமக்களின் ஜனன ராசிக்கும் எட்டாம் வீட்டில் இடம்
பெற்றிருக்கக்கூடாது.
9. ஒன்பதாவது விதி
திருமணநாள் மணமக்களின் சந்திராஷ்டம தினமாக இல்லாமல்
இருப்பது மிகமிக முக்கியமான விதி.
10. பத்தாம் விதி.
மணமக்களின் ஜனன நட்சத்திர நாளிலும் 3, 5, 7, 12, 14, 16, 21, 23, 2வதாக
வரும் நட்சத்திர தினங்களிலும் திருமணம் நடத்தக்கூடாது.
11. பதினொன்றாம் விதி
கடைசியாக மணமக்களின் பிறந்த தேதி அல்லது கிழமைகளிலும்
கல்யாணம் பண்ணக்கூடாது.
- இவ்வளவு விஷயங்கள் தெரிந்து கொண்டபின் நீங்களே அனைத்து
சுபகாரியங்களுக்கும் நல்ல நாள் பார்த்துவிடுவீர்கள் தானே. அவரவர்
குலதெய்வத்தை மனதில் வேண்டிக்கொண்டு உங்கள் வீட்டில் உள்ள
பெரியவர்களின் ஆசியுடன் நல்லதொரு நாளைக்
குறியுங்கள்

அஸ்தங்கம் -ஜோதிடர் பாலு சர்மாஅவர்கள்

புத, சுக், செ, குரு, சனி மட்டுமல்ல சந்திரனுக்கும் கிரக அஸ்தங்கம் உண்டு. இது தொடர்பாக மூலநூலான சூரிய சித்தாந்தத்தில் 12 மற்றும் 13 அத்யாயம் கூறுவதை இங்கு காணலாம்.
கிரக அஸ்தங்கம் - உதயம் & அஸ்தமனம் (Helical Rising and Setting)
சூரிய மண்டலத்தில் உள்ள எந்த ஒரு கிரகமும், குறுங்கோளும், வின்கல்லும், வால்நட்சத்திரமும் சூரியனுக்கு அருகில் குறிப்பிட்ட கோணஅளவு நெருங்கும் பொழுது
அது சூரியனின் பிரகாசத்தால் மணித கண்களுக்கு தெரிவதில்லை இதையே அஸ்தங்கம் என்று அழைக்கிறோம்.
புதன்(12, & 14), சுக்கிரன்(8), செவ்வாய்( 17), குரு (11), சனி (15) அடைப்பில் குறிப்பிட்ட நிஜ கோண அளவில் அருகில் வரும் பொழுது அது கண்களுக்கு புலப்படுவதில்லை
ஆயினும் (நல்ல பார்வையுடயவர்களுக்கு இது வேறுபடும்). நவீன உலகில் புற ஊதா கதிர் தொலைநோக்கி(ultraviolet telescope), ரேடியோ தொலை நோக்கி (Radio telescope), மூலமாக அதன் இருப்பிடத்தை அறிய முடியும்.
கிரக யுத்தம், (War) Conjenction
மேற்குறிப்பிட் 5 கிரகங்களும் ஓன்றுக்கொன்று அருகில் வரும் பொழுது நிகழ்வது கிரக யுத்தம்
கிரக சமாகமம் (meeting)
மேற்குறிப்பிட் 5 கிரகங்களும் சந்திரனுடன் இணைவது சமாகமம் ஆகும் (சூரியனுடன் இணைந்தால் அஸ்தங்கம்)
சரி சந்திரனுக்கு அஸ்தங்கம் உண்டா என்றால் அதுதான் அமாவாசை, (சூரிய ஒளியால் ஒரு கிரகம் மறைக்கப்படுவது அஸ்தங்கம் : சூ.சித் - அத்: 12)
சந்திர அஸ்தங்கம் குறித்த பலநூல்களிலும் தகவல் உள்ளது அதில் சந்திரன் ஒரு திதி பிரமாணம்(12 பாகை) அளவிற்கு அஸ்தங்க தோஷம் கொண்டது,
அதாகில் அமாவாசைக்கு முன்னர் தேய்பிறை சதுர்தசி முதல் அமாவாசைக்கு பின்னர் சுக்ல பிரதமை வரை அஸ்தங்க தோஷம் உள்ளது. எனவேதான் கிருஷ்ண சதுர்தசி, அமாவாசை, சுக்ல பிரதமையும் சுபகாரியம் செய்ய விலக்கப்பட்டநாளாகும்.(இது ஜோதிஷ நூல்படி)
சூரிய கிரகணம் (Solar Eclipse) அஸ்தங்கமா?
சூரிய பிரகாசத்தினால் கிரகம் மறைந்தால் அது அஸ்தங்கம், சூரியனே மறைக்கப்பட்டால் அதுவும் அஸ்தங்கம்தான் ஆயினும் பூரண சூரியகிரகணம் மட்டுமே அஸ்தங்கம் ஆகும்.
குறிப்பு: எனவேதான் கிரகண மாதம் சுபம் விலக்கப்படுகிறது, கிரகணம் அன்று சிரார்தம் கூட கிரகணம் முடிந்த பின்னர் செய்யப்படுகிறது
கிரக கடவு (Transit)அஸ்தங்கமா?
புதன், சுக்கிரன் அஸ்தங்ககாலத்தில் சூரிய விட்டத்தை கடப்பது அஸ்தங்கம் மட்டுமல்ல இதுவும் ஒருவித கிரக கிரகணமாகவும் (Planet Eclipse) கொள்ளவும். இதை கடவு (Planet Transit) என்று அழைக்கிறார்கள்
அஸ்தங்கம் கிரகணம் இடையே என்ன வேறுபாடு Combustion & Eclipse
அஸ்தங்கம் என்பது பிரகாசமான சூரிய ஒளியால் ஒரு வானியல் பொருள்(கோள், நிலவு, வின்கல்) கண்களுக்கு புலப்படாமல் போவதாகும்.
கிரகணம் என்பது சூரியனை சந்திரன் மறைப்பது அல்லது சந்திரன் மீது விழும் சூரிய ஒளியை பூமி நேர்கோட்டில் வருகைதந்து மறைப்பதாகும்.
இந்த விதி மற்ற நிலவுடன் கூடிய கிரகங்களுக்கும் பொருந்தும்.
வானியல் மறைவு (Occultation)
ஒரு வானியல் பொருளை மற்றொரு வானியல் பொருள் மறைத்தலாகும்.
உதாரணம் நட்சத்திரம், அல்லது ஒரு கோளை நிலவு மறைப்பதாகும்
பஞ்சாங்கத்தி்ல் அமாவாசை அன்று நேத்திரன்-ஜீவன் குருடு எனும் நிலையில் "0" என்று குறிப்படிப்பட்டிருக்கும் சந்திரனின் மீது விழும் ஒளியின் அளவு, மற்றும் சூரிய நிலையே நேத்திர-ஜீவன்.
;நேத்திரம், ஜீவன் இல்லை எனெனில் அன்று திருமணம் செய்ய உகந்தநாளல்ல (அதாகில் சந்திரன் சூரிய சேர்கையால் அஸ்தங்கம் தோஷம் இருப்பதால்)
பாலு சரவண சர்மா, ஸ்ரீதணிகை பஞ்சாங்கம், Tambaram Astrologer
www.prohithar.com
www.thanigaipanchangam.com

ஆண்களுக்கு மட்டும்

ஆண்களுக்கு மட்டும்
ஆண்மை குறைபாடு என்பது தீர்க்க முடியாத பிரச்சனை என்பதை முதலில் மனதிலிருந்து நீக்கிவிடுங்கள்
உங்களிடத்தில் ஆண்மைகுறைபாடு ஏற்படுமுன் உண்டாகும் சில அறிகுறிகளை கவனித்தால் போதும் இந்த கவலையிலிருந்து விடுபடலாம் ,கடைகளில் -விளம்பரங்களில் காணப்படும் கண்ட மருந்துகளை வாங்கி சாப்பிடுவதை முதலில் நிறுத்தி கொள்வது நல்லது ,இரண்டாவது ஆண்மை குறைபாடுகளை போக்கிடும் உணவுகளை உட்கொள்ளவும், மேலும் ஆண்மைகுறைபாடுகளுக்கான காரணங்களை தவிர்க்க வேண்டும்
ஆண்மை குறைபாடுகளுக்கான அறிகுறிகள்:-
-------------------------------------------------------------------
1)கோபமும் எரிச்சலும் மேலோங்கி காணப்படும்
2) உடலில் வேர்வை அதிகரிக்கும்
3) மர்ம ஸ்தான பகுதிகளில் அழுக்குகள் அதிகமாகும்
4) மர்ம ஸ்தானத்தில் பிசுபிசுப்பு இருந்துக்கொண்டே இருக்கும்
5) நீர்கடுப்பு அடிக்கடி ஏற்படும்
6) கால் –ஆடுசதை பகுதிகளில் வலிகளும் பிடிப்புகளும் உண்டாகும்
7) முதுகு – பின் கழுத்து-தோள் பகுதிகளில் வலிகளும் பிடிப்புகளும் உண்டாகும்
8) அடிக்கடி சோர்வாக காணப்படுவீர்கள்
9) மனைவியிடம் சம்பந்தமில்லாமல் கோபப்படுவீர்கள்
10) இரவு நேரங்களில் தூக்கம் வராது பகலில் தூக்கம் வரும்
11) உடலில் அரிப்புகள் உண்டாகும் ,உடல் முறுக்கி முறுக்கி வலிக்கும்
12) உடலில் வறட்சி காணப்படும் தாகம் அதிகமாகும்
13) பிருஷ்டங்கள் சுருங்க ஆரம்பிக்கும் ,அடிக்கடி அரிப்புகள் உண்டாகும்
14) சில நேரங்களில் தள்ளாட வைக்கும்
15) ஆண்குறிகளில் வெடிப்புகளும் அரிப்புகளும் உண்டாகும்
மேற்கண்ட அறிகுறிகளில் ஏதேனும் தொடர்ந்து காணப்பட்டால் ஆண்மை குறைபாடு உள்ளதாக கொள்ளவும் ,ஒவ்வொரு தனி ஆணுக்கும் வெவ்வேறு காரணங்களால் ஆண்மை குறைபாடு ஏற்படுவதால் அதற்கு தகுந்த ஆலோசனைகள் பெற விரும்புவர்கள் என்னுடைய இன் பாக்ஸில் கேட்கவும் ரகசியங்கள் பாதுக்காக்க படும் சதயம் M.மீனாட்சி சுந்தரம் -9894541577

Saturday, April 30, 2016

2016 மே மாதம் பணம் வரும் காலம்

2016 மே மாதம் பணம் வரும் காலம்-
2016 மே மாதம் பணம் வரும் காலம்-12RASI
2016 மே மாதம் மேசம் ராசிக்கு
2,5,8,11,13,15,16,19,23,25,27,28,30,31 தேதிகளில் பணம் வரும் காலம்
2016 மே மாதம் ரிசபம் ராசிக்கு
3,4,7,9,10,12,13,15,17,18,19,20,22,23,26,28,29 தேதிகளில் பணம் வரும் காலம்
2016 மே மாதம் மிதுனம் ராசிக்கு
2,4,7,10,12,13,14,16,17,18,20,21,23,25,26,28,29 தேதிகளில் பணம் வரும் காலம்
2016 மே மாதம் கடகம் ராசிக்கு
3,4,6,10,12,14,16,19,20,21,23,25,27,28,30 தேதிகளில் பணம் வரும் காலம்
2016 மே மாதம் சிம்மம் ராசிக்கு
1,3,7,9,12,14,16,17,18,19,21,24,25,26,28,29,31 தேதிகளில் பணம் வரும் காலம்
2016 மே மாதம் கன்னி ராசிக்கு
3,4,6,9,10,13,14,16,17,19,21,23,24,27,28,29,30 தேதிகளில் பணம் வரும் காலம்
2016 மே மாதம் துலாம் ராசிக்கு
2,3,6,7,10,11,13,16,17,18,20,21,25,26,28,29 தேதிகளில் பணம் வரும் காலம்
2016 மே மாதம் விருச்சகம் ராசிக்கு
2,3,5,8,,9,10,12,13,15,17,18,19,23,26,28,29,31 தேதிகளில் பணம் வரும் காலம்
2016 மே மாதம் தனுசு ராசிக்கு
1,2,3,6,7,10,12,14,15,16,19,21,23,25,26,29,30 தேதிகளில் பணம் வரும் காலம்
2016 மே மாதம் மகரம் ராசிக்கு
2,4,5,7,10,13,14,16,17,19,21,24,25,26,28,29,30 தேதிகளில் பணம் வரும் காலம்
2016 மே மாதம் கும்பம்ராசிக்கு
2,3,6,9,10,12,13,15,16,17,18,19,21,23,24,25,26,28,29 தேதிகளில் பணம் வரும் காலம்
2016 மே மாதம் மீனம்ராசிக்கு
1,2,5,6,8,10,11,13,14,16,17,18,19,20,24,25,26,28,29 தேதிகளில் பணம் வரும் காலம்

சதயம் ஜோதிடம்- 9894541577

Saturday, June 14, 2014

குரு பெயர்ச்சி பலன்கள் 19-6-2014

குரு பெயர்ச்சி பலன்கள்
இனியவர்களுக்கு என் இனிய வணக்கங்கள்
குரு பிரகஸ்பதி என்பவர் தேவர்களின் குருவும், நவகிரகங்களில் ஒருவரும் ஆவார். இவர் சப்தரிசிகளில் ஒருவரான ஆங்கிரஸ முனிவரின் மகனாவார் இவருக்கு தாரை என்ற மனைவியும் உண்டு. இவர் நான்கு வகையான வேதங்களையும், அறுபத்து நான்கு கலைகளையும் அறிந்தவர். எண்ணற்ற யாகங்களையும் செய்து தேவர்களின் குருவாக மாறினார். அத்துடன் திட்டையில் கோயில் கொண்டுள்ள வசிஷ்டேஸ்வரரைக் வணங்கி நவகிரகங்களில் வியாழனாக அந்தஸ்தினைப் பெற்றார். அதனால் வியாழன் கிரகம் ராஜகிரகம் என்று அழைக்கப்படுகிறது
இவர் இடம் பெயர்வதே குரு பெயர்ச்சி என்று வழங்கப்படுகிறது. இவருக்கு அந்தணன், அமைச்சன், அரசன், ஆசான், ஆண்டளப்பான், குரு, சிகிண்டிசன், சீவன், சுரகுரு, தாராபதி, தெய்வமந்திரி, நற்கோள், பிரகஸ்பதி, பீதகன், பொன்னன், மறையோன்,வேதன், வேந்தன் என பதினெட்டு பெயர்கள் உள்ளன. இவரின் சொந்த வீடுகள் தனுசு மற்றும் மீனம். ஒளி படைத்த ஞானிகளையும், மேதைகளையும் உருவாக்குபவர் இவர்.
நிகழும் ஜய வருடம் ஆனி மாதம் 5-ம் தேதி வியாழக்கிழமை (19.6.2014) கிருஷ்ணபட்சத்து, சப்தமி திதி, கீழ்நோக்குள்ள பூரட்டாதி நட்சத்திரம், ஆயுஷ்மான் நாமயோகம், பவம் நாமகரணம், நேத்திரம், ஜீவனம் நிறைந்த சித்தயோகத்தில் பஞ்ச பட்சியில் மயில் துயில்கொள்ளும் நேரத்தில் உத்ராயணப் புண்ணிய காலம் கிரீஷ்ம ருதுவில் பிரகஸ்பதி எனும் குருபகவான் மிதுன ராசியிலிருந்து கடகம் ராசிக்கு காலை மணி 8.47க்கு பெயர்ச்சி ஆகிறார்

மேசம்
உங்களின் பாக்யாதிபதியான குரு பகவான் உச்சம் பெற்று அமர்வதால் இதுவரை இருந்து வந்த தடைகள், பணப்பற்றாக்குறை, தாழ்வு மனப்பான்மை எல்லாம் நீங்கும். மற்றவர்களுக்காக ஜாமீன், கேரண்டர் கையெழுத்திட. வேண்டாம் ப்ளான் அப்ரூவல் இல்லாமல் வீடு கட்டத் தொடங்க வேண்டாம்
பணப் புழக்கம் அதிகரிக்கும். வேலை கிடைக்கும். பிள்ளைகளின் திருமண விஷயத்தில் அவசர முடிவுகள் எடுக்க வேண்டாம். அவர்களின் விருப்பத்தை மீறி எதையும் திணிக்க வேண்டாம். பிள்ளைகளை அவர்கள் விரும்பிய கல்விப் பிரிவில் சேர்ப்பது நல்லது. இந்த குரு மாற்றம் அலைச்சலையும், பணப் பற்றாக்குறையையும் தந்தாலும் விடாமுயற்சியாலும் வி.ஐ.பி.களின் நட்பாலும் முன்னேற வைக்கும்
ரிஷபம்
எதிலும் மாற்றத்தை விரும்புபவர்களே! கடந்த ஓராண்டு காலமாக பணம், பதவி, செல்வாக்குடன் மகிழ்ச்சியையும் தந்த குரு பகவான் உங்கள் ராசிக்கு 3-ம் வீட்டில் அமர்கிறார். 3-ல் குரு முடக்குவாரே என்றெல்லாம் அஞ்ச வேண்டாம். உங்கள் ராசிநாதனான சுக்ரனுக்கு எதிர் கதிர்வீச்சுடைய குரு 3-ல் மறைவதால் உங்கள் முன்னேற்றம் தொடரும்.
குரு மறைவதால் பயணங்கள் அதிகரிக்கும். நியாயமான செலவுகளும் கூடும்.. வேலைச்சுமை கூடும். உங்கள் யோகாதிபதிகளான சனி பகவானின் பூசம் நட்சத்திரத்திலும், புதனின் ஆயில்யம் நட்சத்திரத்திலும் குரு பயணிப்பதால் குழந்தை பாக்யம் உண்டு. வேலை கிடைக்கும். வாகனம் வாங்குவீர்கள். அரசிடமிருந்து கிடைக்க வேண்டிய சலுகைகள், வீடு கட்ட அனுமதி எல்லாம் உடன் வந்து சேரும்.
. முயற்சி ஸ்தானமான 3-ம் வீட்டில் குரு அமர்வதால் எந்த வேலையையும் திட்டமிட்டுச் செய்வது நல்லது.. இளைய சகோதர வகையில் மனத்தாங்கல் வரும். வீடு, மனை விற்பது, வாங்குவதில் கவனம் தேவை. குரு 7-ம் வீட்டைப் பார்ப்பதால் தள்ளிப் போன திருமணம் கூடி வரும். தாம்பத்யம் இனிக்கும். குரு லாப வீட்டைப் பார்ப்பதால் ஷேர் மூலம் பணம் வரும்.
மூத்த சகோதரர் உங்களின் புதிய திட்டங்களை ஆதரிப்பார். உயர் கல்வி, உத்யோகத்தின் பொருட்டு பிள்ளைகளை பிரிய வேண்டி வரும். மூச்சுப் பிடிப்பு வரக்கூடும். எனவே எடை மிகுந்த பொருட்களைத் தூக்க முயற்சிக்க வேண்டாம்.. வியாபாரத்தில் கமிஷன், புரோக்கரேஜ் வகைகளால் ஆதாயம் உண்டு. பெரிய முதலீடுகள் வேண்டாம். தொடர் விடுப்பாலும், புது அதிகாரியின் கெடுபிடியாலும் வேலைச்சுமை அதிகரிக்கும்-. சம்பள உயர்வு உண்டு.இந்த குருமாற்றம் பயணங்களையும், செலவினங்களையும் அதிகரிக்க வைத்தாலும் வெற்றியையும் தருவதாக அமையும்.
மிதுனம்

அழுத்தமான கொள்கை, கோட்பாடு உள்ளவர்களே! இதுவரை உங்கள் ராசிக்குள் நுழைந்து உங்களை நாலாவிதத்திலும் அலைக்கழித்த குரு பகவான் உங்கள் ராசிக்கு 2-ம் வீட்டில் அமர்கிறார். ராசியை விட்டு குரு விலகுவதால் வாடி வதங்கியிருந்த உங்கள் முகம் இனி மலரும். சாதாரண விஷயத்தில்கூடச் சரியான முடிவுகள் எடுக்க முடியாமல் தடுமாறினீர்களே! இனி தன்னிச்சையாக பெரிய முடிவுகள் எடுப்பீர்கள். உங்கள் ஆளுமைத் திறன் அதிகரிக்கும். பல்வேறு காரணங்களால் பிரிந்திருந்த கணவன்-மனைவி ஒன்று சேருவீர்கள். குழந்தை பாக்யம் கிடைக்கும்.

‘வேலைக் கிடைத்தும் ஆர்வமில்லாமல் இருந்தீர்களே! இனி உங்கள் ரசனைக்கேற்ற வேலை அமையும். மகளுக்கு உறவினர்கள் மெச்சும்படி திருமணத்தை முடிப்பீர்கள். வழக்குகள் சாதகமாகும் எதிர்பார்த்த தொகை வரும். ஷேர் மூலம் பணம் வரும். பழுதான வாகனத்தை மாற்றுவீர்கள். கோபம் குறையும். சாதுர்யமாகப் பேசும் வித்தையைக் கற்றுக்கொள்வீர்கள். முதலீடு செய்து சிலர் புதுத் தொழில் தொடங்குவீர்கள். அடகிலிருந்த நகை மற்றும் வீட்டு பத்திரங்களை மீட்பீர்கள். வி.ஐ.பி.கள் அறிமுகமாவார்கள்.

பழைய கடனில் ஒரு பகுதியை பைசல் செய்வீர்கள். பயணங்களால் ஆதாயம் உண்டாகும். குரு 8-ம் வீட்டைப் பார்ப்பதால் அயல்நாடு செல்வீர்கள். சிலருக்கு வெளிநாட்டில் வேலை கிடைக்கும். தூக்கமில்லாமல் தவித்தீர்களே! இனி ஆழ்ந்த உறக்கம் வரும். சகோதரங்களுக்குள் இருந்து வந்த கருத்து மோதல்கள் விலகும். பாகப் பிரிவினை நல்ல முறையில் முடிந்து பூர்வீகச் சொத்து கைக்கு வரும். அனுபவமிக்க வேலையாட்கள் பணியில் சேருவார்கள். உத்யோகத்தில் மறுக்கப்பட்ட பதவி உயர்வு, சம்பள உயர்வு இனி உண்டு. தொல்லை கொடுத்த அதிகாரி மாறுவார்.
இந்த குரு மாற்றம் சமூகத்தில் ஒரு அந்தஸ்தையும், பணவரவை அதிகப்படுத்துவதாகவும் அமையும்.
கடகம்
மற்றவர்களிடமிருந்து மாறுபட்ட சிந்தனை உடையவர்களே! கடந்த ஓராண்டு காலமாக எதைத் தொட்டாலும் நட்டத்தையும், இழப்புகளையும், ஏமாற்றங்களையும் அடுக்கடுக்காக தந்து உங்களை அலைக்கழித்தாரே குரு பகவான். இப்போதுஉங்கள் ராசிக்குள் நுழைகிறார். “ஜென்மத்திலே ராமர், வனத்திலே சீதையை சிறை வைத்தது” என்றொரு பாடல் இருக்கின்றது.
அதன்படி கணவன்-மனைவிக்குள் உப்புப் பொறாத விஷயத்திற்கெல்லாம் சண்டை, சச்சரவு வர வாய்ப்பிருக்கிறது குடும்பத்தில் ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்துப் போவது நல்லது. பதறினால் சிதறிவிடும் என்பதை நினைவில் நிறுத்துங்கள். ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுங்கள். சாப்பாட்டில் காரம், உப்பைக் குறைத்துக்கொள்ளுங்கள்.
நடைப்பயிற்சி, எளிய உடற்பயிற்சி அன்றாடம் அவசியமாகிறது. மஞ்சள் காமாலை, காய்ச்சல், சளித் தொந்தரவு வரக்கூடும். முடிந்தவரை வெளி உணவுகளைத் தவிர்க்கப்பாருங்கள். உங்களின் பிரபல யோகாதிபதியான குரு பகவான் உங்கள் ராசிக்குள் அமர்ந்து ஆரோக்கியத்தை பாதித்தாலும் உச்சமடைவதால் பண வரவு அதிகரிக்கும். சின்னச் சின்ன கடனை பைசல் செய்வீர்கள். வீடு, மனை வாங்க வங்கிக் கடன் உதவி கிடைக்கும். பிரபலங்களால் ஆதாயம் உண்டு. தள்ளிப் போன வழக்கில் நல்ல தீர்ப்பு வரும்.
உங்கள் பிரார்த்தனைக் கேற்ப குழந்தை பாக்யம் கிடைக்கும். வேலையும் கிடைக்கும். பழைய நகையை மாற்றுவீர்கள். குரு முக்கியமான வீடுகளைப் பார்வையிடுவதால் உங்களின் அந்தஸ்து ஒரு படி உயரும். கௌரவப் பதவிகள் கிடைக்கும். பெரிய நோய்களுக்கான அறிகுறிகள் இருப்பதுப் போல் தோன்றும். குழம்பாதீர்கள். எதிர்மறை எண்ணங்களைத் தவிர்ப்பது நல்லது.. மேலதிகாரிகள் உங்களை நம்பி சில கூடுதல் வேலைகளை ஒப்படைப்பார்கள்.
ஆகமொத்தம் இந்த குரு பெயர்ச்சி ஒருவித படபடப்பையும், வேலைச் சுமையையும் தந்தாலும் கடந்தாண்டைவிட வளர்ச்சியையும், செல்வாக்கையும் தரும்.
சிம்மம்
குறிக்கோளை அடையும்வரை அயராமல் பாடு படுபவர்களே! கடந்த ஓராண்டு காலமாக குரு பகவான் உங்களுடைய ராசிக்கு லாப வீட்டில் அமர்ந்து உங்களுடைய அடிப்படை வசதிகளை அதிகப்படுத்தினார். அதிகாரப் பதவியிலும் உங்களை அமர வைத்து அழகு பார்த்தார். எதிர்த்தவர்களையெல்லாம் அடக்கினார். இப்போது உங்கள் ராசிக்கு 12-ம் வீட்டில் அமர்வதால் முன்னேற்றம் தடைப்படாது. ஆனால் அலைச்சல் இருக்கும். அத்துமீறிய செலவுகளால் கடன் வாங்க வேண்டி வரும்.
ஓய்வெடுக்க முடியாதபடி வேலைச்சுமை அதிகரிக்கும் அனைத்திலும் நீங்கள் நேரடி கவனம் செலுத்துவது நல்லது. கூடாப் பழக்கமுள்ள நண்பர்களின் நட்பைத் தவிர்ப்பது நல்லது. அடிக்கடி உணர்ச்சிவசப்படுவீர்கள். முன்கோபத்தையும் கொஞ்சம் கட்டுப்படுத்துவது நல்லது. வெளிநாடு செல்ல விசா கிடைக்கும். மகளுக்கு நல்ல வரன் அமையும். . தூக்கம் குறையும்.
நீண்ட நாட்களாக நினைத்திருந்த புண்ணிய ஸ்தலங்களுக்குச் சென்று வருவீர்கள். புதிதாக வாகனம், மின்னணு, மின்சார சாதனங்கள் வாங்குவீர்கள். அரைகுறையாக நின்ற வீடு கட்டும் பணியைத் தொடங்குவீர்கள். வங்கிக் கடன் உதவி கிடைக்கும். பழைய வழக்கில் நல்ல தீர்ப்பு வரும். குரு 8-வது வீட்டை பார்ப்பதால் பயணங்கள் உண்டு. அயல்நாடு சென்று வருவீர்கள்.
புது முதலீடுகள் செய்ய வேண்டாம். கமிஷன், வாகன உதிரி பாகங்கள், துரித உணவு வகைகளால் லாபமடைவீர்கள் உத்யோகத்தில் வேலைச் சுமை இருந்தாலும் அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும்
இந்த குரு மாற்றம் சுபச் செலவுகளையும், பயணங்களால் திருப்பங்களையும் தரும்.
கன்னி

யதார்த்தமான பேச்சால் எல்லோரையும் வசீகரிப்பவர் களே குரு பகவான் இப்போது உங்கள் ராசிக்கு 11-ம் வீட்டில் அமர்வதால் உங்களின் புகழ், கௌரவம் உயரும்.
ஏமாந்த தொகை கைக்கு வரும். கைமாற்றாகவும், கடனாகவும் வாங்கியிருந்த பணத்தையும் ஒருவழியாகத் தந்து முடிப்பீர்கள். குடும்பத்தில் இழந்த செல்வாக்கை மீண்டும் பெறுவீர்கள். குழந்தை பாக்கியம் கிடைக்கும். வேலைக்கு விண்ணப்பித்து காத்திருந்தவர்களுக்கு நல்ல நிறுவனத்திலிருந்து அழைப்பு வரும். உறவினர், நண்பர்கள் உங்களை சரியாகப் புரிந்துக் கொண்டு பேசத் தொடங்குவார்கள்.
வழக்கில் வெற்றி பெறுவீர்கள். வெகுநாள் கனவாக இருந்த வீடு வாங்கும் ஆசை இப்போது நிறைவேறும். புதுப் பதவிகள், பொறுப்புகள் தேடி வரும். திருமணம் தள்ளிப் போனவர்களுக்குக் கூடிவரும். பங்குச் சந்தை மூலமாகப் பணம் வரும்.. இளைய சகோதர வகையில் உதவிகள் உண்டு பூர்வீக சொத்துப் பிரச்னை முடிவுக்கு வரும். பிள்ளைகளால் பெருமை உண்டு.
உயர் கல்வி, உத்யோகம், திருமணம் சம்பந்தப்பட்ட முயற்சிகள் நல்ல விதத்தில் முடியும். வி.ஐ.பி.களின் நட்பு கிடைக்கும். சுப நிகழ்ச்சிகளால் வீடு களைகட்டும். மனைவி உங்களின் புது முயற்சிகளுக்கு ஆதரவாக இருப்பார். புது முதலீடுகள் செய்து வியாபாரத்தை விரிவுபடுத்துவீர்கள். , எதிர்ப்புகள் நீங்கும். இனி உங்கள் கை ஓங்கும். புதுப் பதவிக்கு உங்களது பெயர் பரிந்துரை செய்யப்படும்.
இந்த குரு மாற்றம் ஒதுங்கி ஓரமாய் இருந்த உங்களுக்கு முதல் மரியாதையைத் தருவதுடன், வசதியையும் தருவதாக அமையும்.
துலாம்
சமாதானத்துடன், சத்தியத்தையும் சொந்த வாழ்வில் கடைப்பிடிப்பவர்களே! உங்கள் ராசிக்கு உங்கள் ராசிக்கு 10-ம் வீட்டில் அமர்வதால். 10-ம் இடம் பதவியை கெடுக்குமே, அந்தஸ்தைக் குறைக்குமே என்றெல்லாம் பெரிதாகக் கவலைப்பட வேண்டாம்.

குரு உச்சமாகி நிற்பதாலும் உங்களின் யோகாதிபதிகளின் நட்சத்திரங்களில் செல்லவிருப்பதாலும் ஓரளவு நன்மையே செய்வார். என்றாலும் ஒரே நேரத்தில் இரண்டு மூன்று வேலைகளை இழுத்துப் போட்டுப் பார்க்க வேண்டி வரும், இதுவரை கட்டிக் காப்பாற்றிய கௌரவத்தை இழந்துவிடுவோமோ என்ற கவலைகள் வந்து நீங்கும்.. பணம் வாங்கி தருவதில் குறுக்கே நிற்க வேண்டாம்.
பிள்ளைகளின் எதிர்காலம் பற்றிய ஒருவித அச்சம் வந்து நீங்கும்.. குருவின் பார்வை உங்களுடைய ராசிக்கு 2-ம் வீட்டின் மீது விழுவதால் ஷேர் மூலம் பணம் வரும். திடீர் செலவுகளால் பணப்பற்றாக்குறை ஏற்படும். குரு 4-ம் வீட்டைப் பார்ப்பதால் தாயாரின் உடல் நிலை சீராகும். ஒரு சொத்தை விற்று மறு சொத்து வாங்கும் யோகம் உண்டாகும்.
வாகனத்தை சீர் செய்வீர்கள். குரு 6-ம் வீட்டைப் பார்ப்பதால் பழைய கடனை பைசல் செய்ய வழி பிறக்கும். வேலையாட்களைத் தட்டிக் கொடுத்து வேலை வாங்குவது நல்லது. கமிஷன், புரோக்கரேஜ், ஸ்டேஷனரி வகைகளால் லாபம் உண்டு. குரு 10-ல் நுழைந்திருப்பதால் உத்யோகத்தில் கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது.. அதிகாரிகளிடம் அதிக உரிமை எடுத்துக்கொள்ள வேண்டாம்.
விட்டுக் கொடுக்கும் மனப்பான்மையும், சகிப்புத் தன்மையும் இருந்தால் மட்டுமே இந்த குரு மாற்றம் ஓரளவு வெற்றியைத் தரும்
விருச்சிகம்
அடித்தட்டு மக்களின் உரிமைக்காக உரக்கக் குரல் கொடுப்பவர்களே! இதுவரை உங்கள் ராசிக்கு 8-ல் அமர்ந்து தொட்டதையெல்லாம் நட்டப்படுத்திய குரு பகவான் இப்போது உங்கள் ராசிக்கு 9-ம் வீட்டில் அமர்வதால் குடும்பத்தில் நிம்மதி பிறக்கும். அடுத்தடுத்த பயணங்களால் அலைக்கழிக்கப்பட்டீர்களே! வேலைச் சுமையால் குடும்பத்தினருடன் மனம் விட்டு பேசவும் நேரமில்லாமல் தவித்தீர்களே!! இனி நீங்கள் எதிர்பார்த்தபடி நல்ல வரன் அமையும். வெளிமாநிலம், வெளிநாட்டில் வேலை பார்க்கும் வரன் அமைய வாய்ப்பிருக்கிறது. உங்கள் தன-பூர்வ புண்யாதிபதியான குரு பகவான் உச்ச பலம் பெறுவதால் வீடு, மனை வாங்குவீர்கள்.

தங்க ஆபரணங்களும் சேரும். தந்தையாரின் ஆரோக்கியம் சீராகும். அவருடனான மோதல் போக்கு மாறும் அரசாங்க விஷயம் நல்ல விதத்தில் முடிவடையும். சிலர் புது வீடு கட்டி குடிபுகுவீர்கள். வேலை கிடைக்கும். குரு உங்கள் ராசியைப் பார்ப்பதால் முகம் மலரும். நோய் விலகும். அடிக்கடி ஏற்பட்ட விபத்துகளிலிருந்து மீள்வீர்கள். தன்னிச்சையாக முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். இளைய சகோதரர் உதவுவார். சொத்து வாங்க வங்கிக் கடன் கிடைக்கும். வியாபாரத்தில் பழைய சரக்குகள் விற்றுத் தீரும். சந்தை ரகசியங்களை தெரிந்துகொள்வீர்கள். வேலையாட்களின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். கெமிக்கல், இரும்பு, மருந்து வகைகளால் லாபமடைவீர்கள். எதிர்பார்த்த பதவி உயர்வு, சம்பள உயர்வு, சலுகைகளெல்லாம் தடையின்றிக் கிடைக்கும். சக ஊழியர்களும் உங்களை மதிக்கத் தொடங்குவார்கள்.
ஆக மொத்தம் இந்த குரு மாற்றம் வாழ்வில் திடீர் யோகங்களையும், திருப்பங்களையும், மரியாதையையும், மகிழ்ச்சியையும் தருவதாக அமையும்.
தனுசு
மனித நேயச் சிந்தனை அதிகமுள்ளவர்களே! உங்கள் ராசிநாதனான குரு பகவான் இப்போது ராசிக்கு 8-ம் வீட்டில் சென்று மறைகிறார். உங்கள் சுகாதிபதியான குரு பகவான் மறைவதால் ஓய்வெடுக்க முடியாதபடி வேலைச் சுமை அதிகமாகும்.
மனைவி, பிள்ளைகளுடன் பேசும் நேரம் குறையும். ஒரே வேலைகளை இரண்டு, மூன்று முறை அலைந்து முடிக்க வேண்டிவரும். அயல்நாடு செல்ல விசா கிடைக்கும். வேற்று மதத்தவர்கள், மொழியினரால் ஆதாயமடைவீர்கள். சிக்கனமாக இருக்க வேண்டுமென்று நினைத்தாலும் அத்தியாவசியச் செலவுகள் அதிகமாகும். புது வேலைக்கு முயற்சி செய்தீர்களே! நல்ல பதில் வரும். வெளிவட்டாரத் தொடர்புகள் விரிவடையும். கணவன்-மனைவிக்குள் ஆரோக்கியமான விவாதங்கள் வரும்.

மகளின் திருமணத்திற்காக வெளியில் கடன் வாங்க வேண்டி வரும். . முன்கோபத்தால் நல்லவர்களைப் பகைத்துக் கொள்ளாதீர்கள். வங்கிக் காசோலையில் முன்னரே கையொப்பமிட்டு வைக்க வேண்டாம். குரு உச்சமாவதாலும், முக்கியமான இடங்களைப் பார்ப்பதாலும் கெடுபலன்கள் குறையும். உங்களிடம் மறைந்திருக்கும் மற்ற திறமைகளை வெளிப்படுத்த நல்ல வாய்ப்புகள் வரும். உங்களுடைய படைப்புகள் தொலைக்காட்சி, பத்திரிகைகளில் வெளியாகும்.

குரு 2-ம் வீட்டைப் பார்ப்பதால் எதிர்பாராத பணவரவு உண்டு. இங்கிதமாகப் பேசி காரியம் சாதிப்பீர்கள். குடும்பத்தில் ஓரளவு அமைதி நிலவும் தாயாரின் உடல் நிலை சீராகும். தாய்வழிச் சொத்து கைக்கு வரும். ஆழ்ந்த உறக்கம் வரும். பிள்ளைகளின் பொறுப்புணர்வு அதிகமாகும். வியாபாரத்தில் போட்டிகளைச் சமாளிக்கக் கடுமையாக உழைக்க வேண்டி வரும்.
வேலையாட்கள், பங்குதாரர்களிடம் கண்டிப்பு காட்ட வேண்டாம். உத்யோகத்தில் பணிகளைப் போராடி முடிப்பீர்கள். புது அதிகாரியால் நெருக்கடிகள் வந்து நீங்கும். மறுக்கப்பட்ட உரிமைகள் கிடைக்கும்.
இந்த குருமாற்றம் அலைச்சலையும், ஓய்வின்மையையும் தந்தாலும் மற்றொரு பக்கம் பணவரவையும் வெற்றியையும் தரும்.

மகரம்

எதிலும் அழகையும், நேர்த்தியையும் விரும்பு பவர்களே! குரு பகவான் இப்போது உங்கள் ராசிக்கு 7-ம் வீட்டில் அமர்ந்து உங்கள் ராசியைப் பார்ப்பதால் அழகு, ஆரோக்கியம் கூடும். உங்களின் ஆளுமைத் திறன் அதிகரிக்கும். உங்களுடைய அறிவாற்றலை வெளிப்படுத்த நல்ல வாய்ப்புகள் வரும்.

தன்னம்பிக்கை பெருகும். பிரபலங்கள் ஆதரவாகப் பேசுவார்கள். தடைப்பட்ட திருமணப் பேச்சு வார்த்தை கூடிவரும். குடும்பத்தில் உங்கள் வார்த்தைக்கு மதிப்புக் கூடும். வருமானம் உயரும். பூர்வீகச் சொத்து பிரச்சினைகளைப் பேசித் தீர்ப்பீர்கள். வழக்கு சாதகமாகும். பிரிந்திருந்தவர்கள் ஒன்று சேருவீர்கள் குழந்தையில்லையே என வருந்திய தம்பதிகளுக்கு அழகான வாரிசு உருவாகும்.
பிள்ளைகளின் பிடிவாத குணம் தளரும். அயல்நாட்டில் தரமான பல்கலைக்கழகத்தில் உயர்கல்வி பெற உங்கள் பிள்ளைகளுக்கு வாய்ப்பு வரும். உறவினர், நண்பர் வருகையால் வீடு களைகட்டும். வீடு, வாகனம் வாங்குவீர்கள் ஆபரணங்கள் வாங்குவீர்கள். அடிக்கடி தொல்லை கொடுத்த, பழுதாகி செலவு வைத்த வாகனத்தை மாற்றுவீர்கள். வராமலிருந்த பணமெல்லாம் கைக்கு வரும். பழையக்கடன் தீரும்உங்களையும் அறியாமல் உங்களிடம் இருந்துவந்த தாழ்வுமனப்பான்மை நீங்கும். இனி நேர்மறை எண்ணங்கள் உருவாகும்.
பெரிய பதவிகள் தேடி வரும். தடைபட்ட வீடு கட்டும் பணியைத் தொடர்வீர்கள்.. புது வேலை கிடைக்கும்.. அதிகாரப் பதவிக்கு தேர்ந்தெடுக்கப்படுவீர்கள். சகோதரங்கள் ஒத்தாசையாக இருப்பார்கள். வீடு, மனை வாங்குவது, விற்பது லாபகரமாக அமையும்.
வியாபாரத்தில் அமோகமாக லாபம் இருக்கும். புது இடத்திற்குக் கடையை மாற்றுவீர்கள். புகழ் பெற்ற நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்வீர்கள். இங்கிதமாகப் பேசி வாடிக்கையாளர்களை கவருவீர்கள். உத்யோகத்தில் எல்லோரும் மதிப்பார்கள். உயரதிகாரிகள் உங்களைக் கலந்தாலோசித்து முடிவுகள் எடுப்பார்கள். சக ஊழியர்கள் உங்கள் வேலைகளை பகிர்ந்து கொள்வார்கள்.
இந்த குரு மாற்றம் இடியாப்பச் சிக்கல்களாய் இருந்த உங்கள் வாழ்க்கையில் அதிரடி அதிர்ஷ்டங்களைத் தருவதாக அமையும்.
கும்பம்

முயற்சியை முதுகெலும்பாகக் கொண்டவர்களே! இதுவரை உங்கள் ராசிக்கு 5-ம் வீட்டில் அமர்ந்து அடிப்படை வசதி, வாய்ப்புகளை அதிகரிக்க வைத்தாரே! பணப்புழக்கம் சரளமாக இருந்ததால் சொத்து வாங்கினீர்களே! நல்லது கெட்டது நான்கையையும் அறிந்து செயல்பட வைத்தாரே! நாலு பேர் மதிக்கத்தக்க வகையில் உங்களின் தராதரத்தை உயர்த்திக் காட்டினார் குரு பகவான்.
இப்போது உங்கள் ராசிக்கு 6-ம் வீட்டில் சென்று மறைவதால் ஆரோக்கியத்தில் கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது. குடும்பத்திலும் சின்ன சின்ன சலசலப்புகள் வரும். கணவன்-மனைவிக்குள் சிலர் குழப்பத்தை ஏற்படுத்த முயற்சி செய்வார்கள். வீண் சந்தேகத்தை விலக்கிக் கொள்ளுங்கள். மற்றவர்கள் பேச்சைக் கேட்டு மனைவியை குறை கூற வேண்டாம்.
. திடீரென்று அறிமுகமாகுபவர்களை நம்பிப் பெரிய முடிவுகளெல்லாம் எடுக்காதீர்கள். மற்றவர்களுடன் உங்களை ஒப்பிட்டுக் கொண்டிருக்க வேண்டாம். உங்களின் தனித்தன்மையைப் பின்பற்றுவது நல்லது. அரசு விவகாரங்களில் அலட்சியம் வேண்டாம். முன்கோபத்தால் நல்லவர்களின் நட்பை இழக்க நேரிடும்.
. பிள்ளைகளை அன்பால் அரவணைத்துப் போங்கள். குரு 12-ம் வீட்டைப் பார்ப்பதால் பழைய பிரச்னைகளுக்கு மாறுபட்ட அணுகுமுறையால் தீர்வு காண்பீர்கள். வீட்டைப் புதுப்பிப்பது, அழகுபடுத்துவது, விரிவுபடுத்துவது போன்ற முயற்சிகளில் ஈடுபடுவீர்கள். புண்ணிய ஸ்தலங்களுக்குச் சென்று வருவீர்கள். குரு 2-ம் வீட்டைப் பார்ப்பதால் பண வரவு திருப்தி தரும். நீங்கள் எதிர்பார்க்கும் தேதியில் பணம் கிடைக்காவிட்டாலும் கடைசி நேரத்தில் கைக்கு வந்து சேரும்.
குரு 10-ம் வீட்டைப் பார்ப்பதால் உத்தியோகத்தில் இடமாற்றம் உண்டு. புது வேலை கிடைக்கும்.. வியாபாரத்தில் ஏற்ற-இறக்கங்கள் இருக்கும். பழைய வாடிக்கையாளர்களைத் தக்க வைத்துக் கொள்ளுங்கள். வேலையாட்களின். உத்யோகத்தில் அலட்சியம் வேண்டாம். உங்களிடம் ஆலோசனை கேட்டு விட்டு அதைத் தாங்கள் யோசித்ததாக மூத்த அதிகாரிகளிடம் சிலர் நல்ல பெயர் வாங்கிக்கொள்வார்கள். உங்கள் திறமைகளை நேரடியாக மூத்த அதிகாரிகளிடம் சிலர் கொண்டு செல்ல மறுப்பார்கள்.
இந்த குருமாற்றம் சிறுசிறு பிரச்னைகளால் உங்களைப் பல நேரங்களில் முணுமுணுக்க வைத்தாலும் சமயோசித புத்தியால் ஓரளவு சாதிக்க வைக்கும்.

மீனம்
அருவி நீர் போல அதிர்ந்து பேசாமல் பனிநீர் போல பாசமாய் பேசுபவர்களே! குரு பகவான். இப்போது உங்கள் ராசிக்கு 5-ம் வீட்டில் அமர்வதால் இனி எதிலும் உங்கள் கை ஓங்கும். செலவுகளைக் குறைக்கத் திட்டமிடுவீர்கள். வராது என்றிருந்த பணம் கைக்கு வரும்.

பிரிந்திருந்த கணவன்-மனைவி ஒன்று சேருவீர்கள். அரைகுறையாக நின்ற வீடு கட்டும் பணியைத் தொடங்குவீர்கள். குழந்தை பாக்யம் கிடைக்கும். பிள்ளைகள் இனி குடும்ப சூழ்நிலையறிந்து பொறுப்பாக நடந்துகொள்வார்கள். உங்கள் அறிவுரைகளையும் ஏற்றுக் கொள்வார்கள். மகளுக்கு நல்ல வரன் அமையும். கோலாகலமாகத் திருமணத்தை முடிப்பீர்கள். எதிர்பார்த்த நிறுவனத்தில் வேலை கிடைக்கும். பூர்வீகச் சொத்தில் சேர வேண்டிய பங்கு கைக்கு வரும்.

தாய்க்கிருந்த நோய் விலகும். ஷேர் மூலம் பணம் வரும். வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும்.. வெளி வட்டாரத்தில் புது அனுபவம் உண்டாகும். பால்ய நண்பர்களைச் சந்தித்து மகிழ்வீர்கள். நீண்ட நாட்களாக எதிர்பார்த்து காத்திருந்த விசா கிடைக்கும். குரு உங்கள் ராசியைப் பார்ப்பதால் நோய் விலகும். எப்போதும் உங்கள் முகம் இனி மலரும். ஆடை, ஆபரணச் சேர்க்கை உண்டு. குரு 9-ம் வீட்டை பார்ப்பதால் சேமிக்கத் தொடங்குவீர்கள்.

வழக்கு சாதகமாகும். புது முதலீடு செய்து தொழில் தொடங்குவீர்கள். தந்தையார் ஆதரவாகப் பேசுவார். தந்தை வழி சொத்து சேரும். அண்ணன் உறுதுணையாக இருப்பார். சிலருக்கு ஷேர் மூலம் பணம் வரும். அக்கம்-பக்கம் வீட்டாருடன் இருந்த சச்சரவு நீங்கும். வியாபாரத்தில் அதிரடியாக லாபம் உண்டு. பெரிய நிறுவனத்துடன் புது ஒப்பந்தம் செய்வதன் மூலமாக உங்கள் நிறுவனத்தின் புகழ் கூடும்.
. உத்யோகத்தில் மறுக்கபட்ட உரிமைகள் கிடைக்கும். அதிகாரிகள் உங்களுக்கு முக்கியத்துவம் தருவார்கள். சம்பள பாக்கி கைக்கு வரும். பதவி உயர்வுக்குத் தேர்ந்தெடுக்கப்படுவீர்கள்.
இந்த குரு மாற்றம் எங்கும் முதல் வரிசையில் உங்களை உட்கார வைப்பதுடன் வசதி, வாய்ப்புகளை அள்ளித் தரும்.
கோசாரத்தில் குரு சாதகமற்ற நிலைகளில் உள்ள ராசிகளில் ஏற்படும் தோஷ பலன்களைக் களைவதற்கு, கீழ்க்காணும் துதியைப் படித்து, வழிபட்டு பலன் பெறலாம்.
தேவ மந்திரி விசாலாக்ஷ
சட லோக ஹிதே சதா
அநேக சிஷ்ய சம்பூர்ண
பீடாம் ஹரது மே குரு
கருத்து: அகன்ற விழிகளை உடையவரும், தேவர்களுக்கு அமைச்சர் போன்றவரும், எப்போதும் உலக நன்மையையே கருத்தில் கொள்பவரும், ஏராளமான சீடர்களைக் கொண்டவருமாகிய குருவை, எனது துன்பங்கள் நீங்க வணங்குகிறேன்.

Wednesday, January 8, 2014

2014 ஜனவரி மாதம் பணம் வரும் காலம்

2014 ஜனவரி மாதம் மேசம் ராசிக்கு
11,13,15,16,19,23,25,26,28,30 தேதிகளில் பணம் வரும் காலம்
2014 ஜனவரி மாதம் ரிசபம் ராசிக்கு
5,7,9,10,12,13,15,17,18,19,20,22,23,26,28,29 தேதிகளில் பணம் வரும் காலம்
2014 ஜனவரி மாதம் மிதுனம் ராசிக்கு
10,12,13,14,16,17,18,20,21,23,24,26,28,29 தேதிகளில் பணம் வரும் காலம்
2014 ஜனவரி மாதம் கடகம் ராசிக்கு
10,12,14,16,19,20,21,23,25,26,28,30 தேதிகளில் பணம் வரும் காலம்
2014 ஜனவரி மாதம் சிம்மம் ராசிக்கு
12,14,16,17,18,19,21,24,25,26,28,29,30 தேதிகளில் பணம் வரும் காலம்
2014 ஜனவரி மாதம் கன்னி ராசிக்கு
10,13,14,16,17,19,20,21,23,24,27,28,29,30, தேதிகளில் பணம் வரும் காலம்
2014 ஜனவரி மாதம் துலாம் ராசிக்கு
10,11,13,16,17,18,20,21,24,26,28,29 தேதிகளில் பணம் வரும் காலம்
2014 ஜனவரி மாதம் விருச்சகம் ராசிக்கு
,9,10,12,13,15,17,18,19,23,26,28,29,30 தேதிகளில் பணம் வரும் காலம்
2014 ஜனவரி மாதம் தனுசு ராசிக்கு
10,12,14,15,16,19,20,21,23,25,26,29,30 தேதிகளில் பணம் வரும் காலம்
2014 ஜனவரி மாதம் மகரம் ராசிக்கு
10,13,14,16,17,18,19,21,24,25,26,28,29,30 தேதிகளில் பணம் வரும் காலம்
2014 ஜனவரி மாதம் கும்பம்ராசிக்கு
10,12,13,15,16,17,18,19,21,23,24,25,26,28,29 தேதிகளில் பணம் வரும் காலம்
2014 ஜனவரி மாதம் மீனம்ராசிக்கு
10,11,13,14,16,17,18,19,20,24,25,26,28,29 தேதிகளில் பணம் வரும் காலம்
சதயம் ஜோதிடம்